என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் மாணவனுடன் ஓட்டம்"
செய்யாறு:
கலசபாக்கம் பொற்கனூர் பகுதியை சேர்ந்தவர் பானு இவரது மனைவி ஹேமாவதி (வயது 27). இவர்களுக்கு 1 மகன் 1 மகள் உள்ளனர். தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த ஹேமாவதி 2 குழந்தைகளுடன் சேத்துப்பட்டு அருந்ததிபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன். செய்யாறில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் ஹேமாவதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.
இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவனை காணவில்லை. இது குறித்து மாணவனின் பெற்றோர் அனக்காவூர் போலீசில் புகார் அளித்தனர்.
அதில் எனது மகனை ஹேமாவதி என்ற பெண் ஆசை வார்தை கூறி கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தனர். இதைதொடந்து போலீசார் ஹேமாவதி வீட்டுக்கு அவரை தேடி சென்றனர். அங்கு அவர் இல்லை. இதனால் அவர் மாணவனுடன் தான் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்குபதிவு செய்து மாணவன் மற்றும் ஹேமாவதியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்